செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தண்டவாளம் கடக்கும்போது கவனம் தேவை...!!!



தண்டவாளம் கடக்கும்போது கவனம் தேவை...!!!



குரோம்பேட்டை வாசியாக நான் புறநகர் பயணத்திற்கு தொடர்வண்டியை தான் பெரிதும் நாடுவேன். தொடர்வண்டி நிலையத்தை அடைய நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் சந்தினை கடந்து செல்வேன். வழியிலேயே தடம் மாறி தண்டவாளத்தின் மேல் நடக்க தொடங்கி விடுவேன். பலருக்கும் உரிய அதே குறுக்கு வழியில் கடக்கும் எண்ணம் தான்.. ஆனால், இங்கே தான் ஆபத்து தொடங்குகிறது. சிறு கவனம் சிதறுதல் கூட உயிரை பறித்துவிடும். சென்ற வாரம் இரண்டு அடுத்தடுத்து விபத்துகளை நேரில் பார்த்து மிகவும் அச்சமடைந்தேன். அன்றுமுதல் தண்டவாளம் கடந்து செல்வதை தவிர்ப்பது என்று முடிவெடுத்தேன். செல்பேசி, பண்பலை வானொலி போன்றவைகளை தண்டவாளம் கடக்கும்போது அறவே தவிர்க்கவேண்டும். படித்தவர்கள் பலர் கூட இந்த தவறினை செய்வது மகிழ்ச்சி அளிக்கவில்லை. உடலும் உயிரும் நமக்கு உரித்தாய அறிய பொக்கிசமாகும். அதை பாதுகாப்பது அவரவர் தலையாய பொறுப்பு. இது போன்ற சிறு கவனக்குறைவால் பேரிழப்பு நிகழாமல் இருப்பின் நனி நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக