செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அறிவியல் - எதிர்திசையில் ஓடிய ஆறு...!!!

எதிர்த் திசையில் ஓடிய ஆறு
- இலொகு

ஓடிக் கொண்டு இருந்த ஆறு எதிர்த்திசையில் ஓடியது என்பதை
கேள்விபட்டிருக்கிறீர்களா ? 1811ஆம் ஆண்டுதான் வியப்பூட்டும் இந்நிகழ்வு நடந்தது. அது ஏன் எதிர்த் திசையில் ஓடியது என்று அறிவதற்கு முன் நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது எனத்தெரிந்து கொள்வோம் . நான்கைந்து நாணயங்கைள ஒன்றன்மீது ஒன்றாக வையுங்கள் . அடியில் உள்ள நாணயத்தைத் நகர்த்திப் பாருங்கள். மேல் உள்ள நாணயங்கள் இலேசாக நகரும் அல்லவா? இதே தான் புவியிலும் ஏற்படுகிறது. புவியின் அடியில் உள்ள நிலத்தட்டுகள் நகர்வதால் மேல் பகுதியில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இவ்வதிர்வுகைள ரிக்டர் அளவால் குறிக்கிறார்கள்.

சம்மு காசுமீர், இமாசலம், ஆகிய வட மேற்கு மாநிலங்கள் சீனாவில் நகரும் நிலத்தட்டுகளால் பாதிக்கப்படுகின்றன. வரலாற்று அடிப்படையில் சப்பான், சீனா, திபெத்து , ஈரான் ஆகிய இடங்கள் வலுக் குறைந்த இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

நில நடுக்கம் வரப் போவதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இயலுமா? நில நடுக்கத்திற்கு முன் சில நிகழ்வுகள் வைத்து நில நடுக்கம் வரப் போவதை அறியலாம். ஆனால் முன் கூட்டியே துல்லியமாகக் கணிப்பது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

2004ஆம் ஆண்டு இந்தோனேசியா ஒட்டிய கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா வரை தாக்கியதை நாம் அறிவோம். இது போன்ற ஒரு நில நடுக்கம் அமெரிக்க லூசினியா பகுதியில் நியூ மாட்ரிட் நகரில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது தான் அங்கிருந்த 'மிசிசிப்பி' ஆறு எதிர்த் திசையில் ஓடியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக