புதன், 14 ஏப்ரல், 2010

யாருக்கு என்ன பயன்...?

நாம் படித்த படிப்பு, செய்யும் தொழில், வாழும் வாழ்க்கைஇதனால் எங்கு யாருக்கு என்ன பயன் இருக்கிறது? என்ற தேடலுக்கு முற்பட்டேன்.


சென்ற வாரம் ஒரு நாள் என் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி பழுது அடைந்தது. சமீபகாலத்தில் தான் பெட்டி சீர் செய்யப்பட்டது. மறுபடியும் பெட்டி தகராறு செய்தது வீட்டில் உள்ளவர் அனைவரயும் எரிச்சல் அடைய செய்தது. குறிப்பாக, என் அம்மாவை.. சமையல் முடித்தவுடன் சிறிது நேரம் பெட்டியை ஓடவிட்டு கண் அயர்வாள். சென்னை வெயிலில் அலுவல் அலைச்சலும் சமையல் குளைச்சலும் வாட்டி எடுக்கையில் குளிர்சாதன பெட்டி இல்லாமல் நிம்மதியான உறக்கமும் இல்லை அம்மாவுக்கு. ஏலேக்ட்ரிசியானை போன் செய்தது சீர் செய்ய அழைக்கையில் அவன் இருப்பு வேலையை முடித்து வருவதிற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்று கூறியது இன்னும் எரிச்சல் கிளப்பியது. மூன்று நாள் கடந்து ஏலேக்ட்ரிசியன் பெட்டியை சீர்பார்க்கையில் முந்தைய வேலையினால் சிறு கோளாறு அடைந்தது. உடனே அதை சீராக்கிவிட்டு கொடுத்தான். வேலை செய்தமைக்கு பணமும் வாங்க மறுத்தான். அம்மா முகத்தில் நிம்மதி பெருமூச்சு. அம்மா அடையும் நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் அவனது வேலை பயன்பட்டதை பார்த்து அவனை பொறாமை கொண்டேன். அவன் புன்முறுவலுடன் விடைபெற்று விரைந்தான். நாம் என்ன வேலை செய்தாலும் யாருக்கு ஏதேனும் பயன் பட்டதா என்று நினைத்து பார்த்தால் எதுவும் தோன்றவில்லை...
வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வந்தது ...


"அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன்னோய்போற் போற்றா க்கடை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக